வைகோ மனுவை ஏற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

SC orders to issue notice to Sterlite industries
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு டெல்லி பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக நடந்த வழக்கை இறுதிக்கட்டமாக விசாரித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

மேலும் ம.தி.மு.க. தலைவர் வைகோ சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் 2 மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த 2 மேல் முறையீடு மனுக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றை ஏற்கனவே தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவோடு இணைத்து விசாரிக்க வேண்டும் என்றும் வைகோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுடன், வைகோ தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுக்களையும் சேர்த்து விசாரணை நடத்த கடந்த அக்டோபர் மாதம் அனுமதி அளித்தது.

இதனைய அடுத்து திங்களன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எஸ்.கே.நிஜ்ஜர், முகமது இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர் கொண்ட பசுமை அமர்வில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+