நக்கீரனுக்கு எதிராக ஜெ., தமிழக அமைச்சர்கள் தொடர்ந்த 15 வழக்குகளுக்கு சுப்ரீம்கோர்ட் தடை!
சென்னை: நக்கீரன் வாரம் இருமுறை இதழுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அமைச்சர்கள் தொடர்ந்த 15 அவதூறு வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நக்கீரன் வார இதழில் வெளியான பல்வேறு செய்திகளுக்காக இதுவரை 15 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளுக்கு தடை கோரி நக்கீரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால் தாக்கல் செய்த மனு:
தமிழக முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் தங்களைப் பற்றிய செய்தி வரும்போது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 199(2)படி சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் மூலம், சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் நக்கீரனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499ல் அளிக்கப்பட்ட 2வது விலக்கின்படி அரசு அதிகாரிகளோ, துறை சார்ந்தவர்களோ தங்களது பணி நிமித்தம் வரும் செய்திகளை அவதூறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, குற்றவியல் நடைமுறைச்சட்டம் 199(2)ன்கீழ் அவர்கள் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்து வருவது சட்டத்திற்கு ஏற்புடையது அல்ல. ஆகவே பத்திரிகையாளர்களுக்கு எதிராக தவறுதலாக பயன்படுத்தப்படும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 199 (2) பிரிவை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு நக்கீரன் கோபால் தமது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நக்கீரன் சார்பாக வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், ராம்சங்கர், எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜரானார்கள்.
வழக்கறிஞர் வாதத்தின்போது, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எழுதிய செய்தியும் அவதூறு செய்தி என்று வழக்கு தொடரப்பட்டுள்ளதையும், ஒரு செய்திக்காக நக்கீரனில் பணிபுரியும் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த 20 நிருபர்கள் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளதையும், சுற்றுலாத்துறை சம்மந்தப்பட்ட செய்தியில் சம்மந்தப்பட்ட நபரின் பெயர் குறிப்பிடாமல் வெளியான செய்திக்காக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளதையும் மேற்கோள் காட்டி வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நக்கீரனுக்கு எதிராக ஜெயலலிதாவும், தமிழக அமைச்சர்கள். அதிகாரிகள் தொடர்ந்து நிலுவையில் உள்ள 15 அவதூறு வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதித்தும், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு, வழக்கு தொடர்ந்த ஜெயலலிதா, அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications