எப்படிக் கற்பிக்கிறார்கள் ஆசிரியர்கள்... தமிழக அரசின் ஆவண படம் வெளியீடு
சென்னை: பள்ளிகளில் எப்படி பாடம் கற்பிக்கப்படுகிறது என்பதை விளக்கும் வகையில் தமிழக அரசு ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது.
இதில் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு தங்களது பள்ளியில் பாடங்கள் கற்பிக்கப்படும் முறை குறித்து விளக்கியுள்ளனர்.
இந்த ஆவணப் படத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கற்பித்தல் நிகழ்வுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விரிவாக எடுத்து சொல்லும் "அனுபவம் புதுமை" என்கிற தலைப்பிலான வீடியோ பதிவினை பள்ளி மாணவர்கள் கண்டு பயனுற்றனர்.

மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) இந்த ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது. பள்ளியில் நடைபெற்றுள்ள பல்வேறு நிகழ்வுகளை மிக அழகாக எடுத்து சொன்னதுடன் உலக அளவில் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிகழ்வுகளை கொண்டு சென்றுள்ள SCERT யில் உள்ள அனைவருக்கும் நன்றிகள் பல. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் புதுமைகள் செய்யும் ஆசிரியர்களை தேர்வு செய்து அதனை ஆவணப்படமாக எடுத்து வெளி உலகுக்கு ஆசிரியர்களின் பன்முக திறமைகளை வெளி காண்பிக்கும் நோக்கில் இதனை செய்து வரும் புதிய முயற்சியாகும் இது.
இந்த ஆவணப் படத்தை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.












Click it and Unblock the Notifications