நல்ல சைக்கிள் கேட்டு ஆட்சியரிடம் முறையீடு.. தூத்துக்குடியில் பள்ளி மாணவி மனு
தூத்துக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், விளையாட்டு போட்டியில் பங்கேற்க வசதியாக அனைத்து வசதியும் கொண்ட சைக்கிளை வழங்க கேட்டு போராடி வருகிறார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், விளையாட்டு போட்டியில் பங்கேற்க வசதியாக அனைத்து வசதியும் கொண்ட சைக்கிளை வழங்க கேட்டு போராடி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம கீழமுடிமண் பகுதியை சேர்ந்தவர் மாணவி ஸ்ரீமதி. இவர் தனது பெற்றோருடன் தூத்துக்குடி ஆட்சியர் அலுலவகம் வந்தார்.

அங்கு அவரிடம் மனு அளித்து கூறியதாவது, ''கீழமுடிமண் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறேன். மாவட்ட அளவில் நடந்த சைக்கிள் போட்டியில் முதல் இடமும், மாநில அளவில் நடந்த போட்டியில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளேன். தேசிய அளவில் நடந்த போட்டியில் 2வது இடம் கிடைத்துள்ளது. '' என்றுள்ளார்.
மேலும் ''இதுவரை நடந்த போட்டியில் பான்சர்சீப் வழங்கிய சைக்கிளையே பயன்படுத்தி வந்தேன். நான் நிரந்தரமாக பயிற்சி மேற்கொள்ள எனக்கு சொந்தமாக கார்பன் கியர் சைக்கிள் தேவைப்படுகிறது.'' என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.
மேலும் ''அந்த சைக்கிளின் விலை அதிகமாக இருப்பதால் என் பெற்றோரால் வாங்கி கொடுக்க முடியாத நிலை உள்ளது. கார்பன் கியர் சைக்கிள் இருந்தால் என்னால் மேலும் பல்வேறு போட்டிகளில் சாதித்து மாவட்டத்துக்கு பல்வேறு பெருமைகளை சேர்க்க முடியும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications