மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
சேலம்: ஓமலூர் அருகே அரசு பள்ளயில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே உள்ள செட்டியப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில், சுப்பிரமணியம் என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை அறைக்கு அழைத்துச் சென்று, செப்போனில் ஆபாசப்படங்களை காண்பித்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளிக்கு திரண்டு வந்து தலைமையாசிரியரை அடித்து உதைத்துள்ளனர். அவர் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பள்ளி வளாகத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications