பள்ளிக்கல்வி இயக்குநர் காரைக்குடி பள்ளியில் ஆய்வு
காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆய்வு நடத்தினார்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர். ச. கண்ணப்பன் அவர்கள் நேற்று ஆய்வு செய்தார்.

தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்றனர்.. மாணவர்கள் பூங்கொத்து கொடுத்தும், கர ஓலி எழுப்பியும் வரவேற்றனர். பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு சாரணர் படை மாணவர்கள் மற்றும் இளஞ் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர்.

மாணவர்களின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை இயக்குநர் பார்வையிட்டார். பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றதற்காக, தலைமையாசிரியர் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்பட்ட சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய இயக்குநர் பள்ளியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுமாறும் கேட்டுக் கொண்டார். மாணவர்களின் திறன்களை அவர்களுடன் உரையாடி கேட்டறிந்தார்.

மாணவர்கள் தொடர்ந்து நன்றாக படித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர் செந்தி வேல் முருகன், மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications