தேர்வின்போது மாணவர்களை விக்ரம் பிரபு படப்பிடிப்பில் ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம்
சிவகங்கை: திருப்பத்தூர் அருகே உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு நாள் அன்று மாணவர்களை படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைத்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே தெக்கூரில் எஸ்.வி. கலாசாலை பள்ளி உள்ளது. விக்ரம் பிரபு நடிக்கும் 'வாகா' படத்திற்கான படப்பிடிப்பு நேற்று காலை இப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அப்போது மதியம் தேர்வு எழுத வந்த பிளஸ் 1 மாணவர்களைத் துணை நடிகர்கள் சிலருடன் சேர்ந்து நிற்கவைத்து சீருடையில் உறுதிமொழி ஏற்கும் காட்சி படமாக்கப்பட்டது.

நேற்று பிளஸ் 1 ரிவிஷன் தேர்வு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு நடந்தது. இந்நிலையில் பள்ளி வளாகத்தினுள் படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது, அதில் மாணவர்களை பங்கேற்க செய்தது பெற்றோரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிற மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியாமலும், வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர். இன்றும் இப்பள்ளியில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க உள்ளது. இந்த சம்பத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேர்வு நாள் அன்று மாணவர்களை படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைத்த பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications