வகுப்பறையில் மாணவிகள் திடீரென "சாமியாட்டம்"... விருத்தாச்சலம் அருகே பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: விருத்தாச்சலம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவிகள் திடீர் என சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா மு.பரூர் கிராமத்தில் வியாழக்கிழமை செல்லியம்மன் கோவில் பொங்கல் விழா கொண்டப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

school students sami attam

உடுக்கை, மேளதாளத்துடன் வந்த பால்குட ஊர்வலம், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது, பள்ளியில் படிக்கும் மாணவிகள் திடீரென எழுந்து சாமி ஆட ஆரம்பித்தனர். இதைபார்த்த ஆசிரியர்கள் ஆச்சர்யபட்டனர்.

இந்த தகவல் உடனே கோவில் பூசாரிக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த பூசாரி சாமி ஆடிய மாணவிகளுக்கு திருநீர், குங்குமம் நெற்றியில் இட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+