மழை தொடருவதால் சென்னை உட்பட 3 மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், இன்று சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள, மாநில கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மண்சரிவால் பாதிக்கப்பட்ட ஏற்காடு மலைப்பாதையில் 3 நாளைக்கு பிறகு இன்றுதான் லகு ரக வாகனங்கள் இயக்க அனுமதிகொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications