விழுப்புரம் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம்.. ரசிகர் மன்ற தலைவர் அறிவிப்பு
விழுப்புரம் ரஜினி மக்கள் மன்றத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை: விழுப்புரம் ரஜினி மக்கள் மன்றத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவர் இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தற்போது விழுப்புரம் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதன்படி விழுப்புரம் மாவட்ட செயலாளராக இப்ராஹிம் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இணைச்செயலாளராக மதிராஜன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இளைஞர் அணி செயலாளராக தினேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். மகளிர் அணி செயலாளராக யமுனா ராணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
துணைச்செயலாளராக சரவணன், டான் போஸ்கோ, முருகன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். விவசாய அணி செயலாளராக முருகன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
வழக்கறிஞர் அணி செயலாளராக வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் வெளியிட்டார். மற்ற மாவட்டங்களுக்கு கூடிய விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications