ராமநாதபுரத்தில் இன்று முதல் ஒன்றரை மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்
ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு இன்று முதல் ஒன்றரை மாதத்துக்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினமும், அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியும் நடைபெறுகிறது.

இதையொட்டி பொது அமைதியை காக்கும் வகையில் 144 நடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில், இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் அக். 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
செப்டம்பர் 9 முதல் 15ம் தேதி வரையும், அக்டோபர் 25 முதல் 31ம் தேதி வரை வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications