உளவுத்துறை எச்சரிக்கை - தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
நெல்லை: மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக ஆட்சி பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்படி உயர் அதிகாரிகளிடம் இருந்து அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு மாலை தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தென் மண்டல ஐஜி அபய்குமார் சிங் உத்தரவின் பேரில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் போலீசார் மாலை முதல் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனை சாவடி வழியாக சென்று வரும் வாகனங்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். விடுதிகளில் தங்கி செல்பவர்களிடம் அவர்களின் செல்போன் எண், முகவரி, அடையாள சான்று ஆகியவற்றை தெளிவாக பதிந்து வைக்குமாறு லாட்ஜ் ஊழியர்களுக்கு போலீசார் அறிவுறித்தியுள்ளனர்.
குறிப்பாக கடலோர பகுதிகளில் சந்தேகம் படும்படியாக நபர்களையும், அவர்களின் தொடர்பு சாதனங்களையும் போலீசார் மற்றும் உளவுத்துறையினர் கண்காணித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுமுறையில் இருக்கும் போலீசார் பணிக்கு திரும்புமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications