வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு.. 5 நிமிடத்திற்கு ஒருமுறை அப்டேட்: லக்கானி
சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் உட்பட, 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு மே 16ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், 19ம் தேதியான நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
வாக்கு எண்ணிக்கை பணி குறித்து இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்த ராஜேஷ் லக்கானி மேலும் கூறியதாவது: வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐடி கார்டு
அடையாள அட்டை இல்லாமல் வாக்கு எண்ணும் பகுதியில் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.

செல்போன் தடை
வாக்கு எண்ணும் மையங்களுக்குள், ஊழியர்கள், செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. மையங்களில் செல்போன்களை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு, பணி முடிந்ததும், அதை எடுத்து செல்ல அனுமதிக்கப்படும்.

மறு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஏதாவது தொகுதியில், வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தால், அங்கு பதிவான, தபால் ஓட்டுக்கள் மீண்டும் எண்ணப்படும்.

துணை ராணுவம்
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்படும். மொத்தம் 80 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

3 அடுக்கு இதுதான்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். முதல் அடுக்கில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், 2வது அடுக்கில், தமிழக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 3வது அடுக்கில் துப்பாக்கி ஏந்தாத காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.

5 நிமிடங்களுக்கு ஒருமுறை
ஒரு டேபிளுக்கு ஒரு ஏஜன்ட் இருக்க அனுமதி வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை நிலவரம் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு லக்கானி தெரிவித்தார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications