வைகோவுக்கு "பர்ஸ்ட் கிளாஸ்".. புழல் சிறையில்!
தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைகோவுக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற குற்றம் சாட்டுகிறேன் புத்தக வெளியீட்டு விழாவில் ஈழப் படுகொலைகள் குறித்தும், விடுதலைப் புலிகள் குறித்தும் வைகோ பேசினார்.
இதனையடுத்து அப்போதைய திமுக ஆட்சி வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தார் வைகோ.

விரைந்து முடியுங்கள்
தேச துரோக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையெனில் என்னை கைது செய்யுங்கள் என்று வைகோ எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். இதன் மீது விசாரணை நடத்திய எழும்பூர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி வைகோவை சிறையிலடைக்க உத்தரவிட்டது.

ஜாமீன் வேண்டாம்
ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என கூறியதால் வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 15 நாள் சிறை வாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் முடக்கம்
வைகோவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரி கட்டுபவர், அரசியல் தலைவர் என்ற அடிப்படையில் வைகோவுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்ன என்ன வசதிகள்
வைகோவுக்கு ஒரு மின்விசிறி, கட்டில், தலையணை, போர்வை, நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. மேலும் அவர் படிப்பதற்காக தினமும் ஒரு ஆங்கில மற்றும் ஒரு தமிழ் பத்திரிகைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர் விரும்பினால் சிறை நூலகத்துக்கு சென்று புத்தகங்களை படிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைகோ மௌன விரதம்
சிறையில் உள்ள வைகோ இன்று வழக்கம் போல் நடைபயிற்சியை மேற்கொண்டார். பின்னர் இன்று அவரது தந்தை வையாபுரியாரின் நினைவு நாள் என்பதால் சோகமாக காணப்பட்ட வைகோ மௌன விரதத்தை கடைபிடித்தார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications