சந்திரபாபு நாயுடு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் போது அதிமுகவால் ஏன் முடியாது? சீமான்
சந்திரபாபு நாயுடுவால் முடியும் போது அதிமுக எம்பிக்களால் ஏன் முடியாது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவில்: குறைந்த எம்பிக்களை கொண்ட சந்திரபாபு நாயுடுவால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் போது 37 எம்பிக்கள் கொண்ட அதிமுகவால் ஏன் கொண்டு வர முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இன்றைய தினம் டிடிவி தினகரன் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அல்லது காவிரி நதி நீர் பங்கீட்டுக் குழு என எதையும் அமைக்காதது ஏன்.
காவிரி என்பது தமிழர்களுக்கு உயிர் பிரச்சினை. ஆனால் பாஜகவினருக்கு இது வெறும் அரசியல். ஆந்திரத்துக்து சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று பாஜகவுக்கு எதிராக குறைவான எம்பிக்களை கொண்ட சந்திரபாபு நாயுடு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அப்படியிருக்கும்போது 37 எம்பிக்களை கொண்டுள்ள அதிமுகவால் ஏதுவும் செய்ய முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications