தை பூசத்துக்கு அரசு விடுமுறை கோரி போராட்டம்- நாம் தமிழர் ஆட்சியில் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு:சீமான்
மதுரை: உலகம் முழுவதும் 13 கோடி தமிழர்கள் கொண்டாடும் தை பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை விடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்தால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
தமிழ் கடவுளான முருகனுக்கு கொண்டாடப்படும் தை பூசத்தை ஒவ்வொரு ஆண்டும் பெருவிழாவாக தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். உலகிலுள்ள 13 கோடி தமிழர்கள் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தைப் பூசம் - விடுமுறை நாள்
தமிழகத்தில் பிற மொழி தினங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தமிழர்களின் முக்கிய திருவிழாவான ஜனவரி 25-ந்தேதி கொண்டாடப்படும் தைப் பூச நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கை ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

நாம் தமிழர் ஆட்சியில்..
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஆட்சியமைத்தால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். ஊழலை உலகத்துக்கே கொண்டு சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்கள் தான் தற்போது அ.தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.

234 தொகுதி வேட்பாளர்கள்
சட்டசபை தேர்தலில் திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். சட்டசபை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து தொகுதி வேட்பாளர்களையும் அறிவிப்போம்.

நிலம் சார் தொழில்களுக்கு முன்னுரிமை
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் விவசாயம், கால்நடை வளர்ப்பு, பயிர் உற்பத்தி என நிலம் சார்ந்த தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை வரவேற்கிறோம். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications