உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி... கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக்கொள்வோம் - சீமான்
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான கூறியுள்ளார்.
திருச்சி : தமிழக உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும், நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் : தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும். குடிப்பதில் தலையிட முடியாது என்று கூறும் நீதிமன்றம் மாணவர்கள் படிப்பதில் தலையிடுகிறது.

தமிழகத்தில் நவம்பர் 17ம் தேதிக்குள் தமிழக்ததில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் கூறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது தனித்தே போட்டியிடும், எங்கள் அணியில் இணைய விரும்பும் கட்சிகளுடன் கூட்டணிக்குத் தயார்.
தமிழகத்தில் வாகன ஓட்டிகன் அசல் வாகன உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அதிமுக அரசு சொல்கிறது. ஆனால் அதிமுக அரசே பாஜகவின் நகலாகத் தான் உள்ளது, என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications