பக்கோடாவை மோடி வித்து காமிக்கட்டும்... அடுத்து என்ன பரோட்டாவும், சால்னாவும்தான்... சீமான் கலகல
Recommended Video
சென்னை: பக்கோடாவை எப்படி விற்பது என்று காட்டுங்கள் நாங்கள் விற்கிறோம் என்றும் அடுத்தது பரோட்டாவும் சால்னாவும் விற்க சொல்வார்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு பெருகவில்லையே என்ற டிவி சேனல் ஒன்றின்கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, பக்கோடா விற்றால் கூட நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம். அது வேலைவாய்ப்பு இல்லை என்பீர்களா என கூறியுள்ளார்.
பக்கோடா விற்பது
இதுபோல் எம்பியான பிறகு முதல்முறையாக நேற்றைய தினம் லோக்சபாவில் அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில் வேலை இல்லாமல் இருப்பதற்கு பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார்.
பிரதமர் முன்மாதிரி
வேலைவாய்ப்பு குறித்து கேட்டால் மோடியும், அமித்ஷாவும் பக்கோடா விற்க சொல்வதை கண்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், முதல்ல முன்மாதிரியா பிரதமரும், அமித்ஷாவும் பக்கோடா விற்றுக் காட்டினால் அதை பார்த்து நாமும் கற்றுக் கொண்டு விற்கலாம்.
நீங்கள் போக வேண்டியதுதானே
பக்கோடா விற்பதே நல்ல வேலை என்றால் மோடி ஏன் பிரதமராக இருக்க வேண்டும்?, அமித்ஷா ஏன் ஒரு கட்சியின் அகில இந்திய தலைவராக இருக்க வேண்டும்? இருவரும் பக்கோடா விற்க சென்று விட வேண்டியதுதானே.
டீ விற்றார் மோடி
இதை பார்த்துவிட்டு நாட்டின் பிரதமரும், கட்சியின் தலைவருமே பக்கோடா விற்கிறார்களே, நாமும் விற்கலாம் என்று போய்விடலாம். அவர்கள் விற்று காட்ட வேண்டும். அவர் ஒரு காலத்தில் மோடி டீ விற்றார், இப்போது நம்மை பக்கோடா விற்க சொல்கிறார்.
கேடு கெட்ட நாடு
அடுத்து புரோட்டாவும் சால்னாவும் விற்க சொன்னாலும் விற்க சொல்லலாம். ஏதோ கேடு கெட்ட நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார் சீமான்.