Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களுக்கு சோறு, தண்ணீ கொடுத்தது தப்பா.. திட்டமிட்டு கொளுத்திய போலீசார்.. கொதித்த சீமான்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சோறு, தண்ணீர் கொடுத்து உதவியவர்களின் மீன் சந்தையை போலீசார் திட்டமிட்டு கொளுத்தியுள்ளனர் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கலவரத்தின் போது நடுகுப்பத்தில் போலீசாரால் எரிக்கப்பட்ட மீன் சந்தையை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை பார்வையிட்டார். அப்போது, தமிழக அரசும், காவல்துறையும் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக குற்றம்சாட்டினார்.

சென்னை நடுகுப்பத்தில் எரிந்த மீன் சந்தை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

Seeman visits Nadu Kuppam

தமிழர்களின் எழுச்சியான போராட்டத்தை திட்டமிட்டு வன்முறையாக தமிழக அரசும், காவல்துறையும் மாற்றியுள்ளது. மாணவர்கள் மீது தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? சட்டம் குறித்து பேச நீதிபதிகள் ஹரிபரந்தாமன் மற்றும் சங்கர சுப்பு போன்றவர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து மாணவர்களிடம் அரசு பேசியிருக்கலாம். அப்படி பேசி இருந்தால் அரசுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருக்காது.

போராட்டக்காரர்களுக்கு சோறும், தண்ணீரும் கொடுத்தது தப்பா. அதற்காக அவர்களது வாழ்வாதாரத்தை நாசப்படுத்துவதா? ஆற்று மணல் கொள்ளையடித்தவர்களை, மரம் வெட்டி கடத்தியவர்களை, ஊழல் செய்தவர்களை என்ன செய்தீர்கள்?

பாஸ்பரஸ் பொடியை தூவி மீன் சந்தையை எரித்துள்ளது போலீஸ். இதனை கண்ணால் பார்த்த சாட்சியங்கள் உள்ளன. பச்சை பிள்ளை என்று கூட பாராமல் குழந்தைகளையும், சிறுவர்களையும் போலீசார் லத்தியால் தாக்கியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு இனி உதவக் கூடாது என்பதற்காகத்தான் போலீசார் இப்படி செய்துள்ளனர்.

Seeman visits Nadu Kuppam

போலீசாரால் மண்டை உடைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எல்லாம் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியுமா? வாழ்வாதாரத்தை சீர் செய்ய வேண்டிய அரசே அதனை நசுக்குகிறது.

உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எரிக்கப்பட்ட மீன் சந்தைக்கு மேற்கூரை அமைத்து, சந்தை மீண்டும் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். காலம் தாழ்த்தாமல் இதனை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+