மாணவர்களுக்கு சோறு, தண்ணீ கொடுத்தது தப்பா.. திட்டமிட்டு கொளுத்திய போலீசார்.. கொதித்த சீமான்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சோறு, தண்ணீர் கொடுத்து உதவியவர்களின் மீன் சந்தையை போலீசார் திட்டமிட்டு கொளுத்தியுள்ளனர் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
சென்னை: சென்னை கலவரத்தின் போது நடுகுப்பத்தில் போலீசாரால் எரிக்கப்பட்ட மீன் சந்தையை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை பார்வையிட்டார். அப்போது, தமிழக அரசும், காவல்துறையும் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக குற்றம்சாட்டினார்.
சென்னை நடுகுப்பத்தில் எரிந்த மீன் சந்தை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழர்களின் எழுச்சியான போராட்டத்தை திட்டமிட்டு வன்முறையாக தமிழக அரசும், காவல்துறையும் மாற்றியுள்ளது. மாணவர்கள் மீது தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? சட்டம் குறித்து பேச நீதிபதிகள் ஹரிபரந்தாமன் மற்றும் சங்கர சுப்பு போன்றவர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து மாணவர்களிடம் அரசு பேசியிருக்கலாம். அப்படி பேசி இருந்தால் அரசுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருக்காது.
போராட்டக்காரர்களுக்கு சோறும், தண்ணீரும் கொடுத்தது தப்பா. அதற்காக அவர்களது வாழ்வாதாரத்தை நாசப்படுத்துவதா? ஆற்று மணல் கொள்ளையடித்தவர்களை, மரம் வெட்டி கடத்தியவர்களை, ஊழல் செய்தவர்களை என்ன செய்தீர்கள்?
பாஸ்பரஸ் பொடியை தூவி மீன் சந்தையை எரித்துள்ளது போலீஸ். இதனை கண்ணால் பார்த்த சாட்சியங்கள் உள்ளன. பச்சை பிள்ளை என்று கூட பாராமல் குழந்தைகளையும், சிறுவர்களையும் போலீசார் லத்தியால் தாக்கியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு இனி உதவக் கூடாது என்பதற்காகத்தான் போலீசார் இப்படி செய்துள்ளனர்.

போலீசாரால் மண்டை உடைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எல்லாம் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியுமா? வாழ்வாதாரத்தை சீர் செய்ய வேண்டிய அரசே அதனை நசுக்குகிறது.
உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எரிக்கப்பட்ட மீன் சந்தைக்கு மேற்கூரை அமைத்து, சந்தை மீண்டும் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். காலம் தாழ்த்தாமல் இதனை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications