இலக்கை அடைவது எப்படி?.. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2-8-16 அன்று தன்னம்பிக்கை பயிலரங்கம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமையாசிரியர் பீட்டர்ராஜா அவர்கள் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ஜாக்குலின் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தன்னம்பிக்கை பயிற்சியாளர் வினைதீர்த்தான் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

மாணவர்களுக்கு நேர மேலாண்மை, நினைவாற்றல் மேம்படுத்துதல், ஆசிரியர் மாணவர் உறவை மேம்படுத்துதல் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இலக்கு அமைத்தல், இலக்கை அடைதல் குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.

மாணவர்களுக்கு குறிப்பாக அரசு பொதுத் தேர்வில அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற தேவையான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பட்டதாரி ஆசிரியர் கீதா சுந்தரேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி அவர்கள் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications