இன்று செமஸ்டர் தேர்வு: ஹால் டிக்கெட் கிடைக்காத மாணவர்கள் திக்..திக்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில இன்று தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் பலருக்கு ஹால் டிக்கெட் கிடைக்காதால் பதற்றத்தில் உள்ளனர்.
நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் தேர்வு இன்று ஆரம்பமாகிறது. ஆனால் ஹால் டிக்கெட் பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் என பல்கலை கழகம் அறிவித்திருந்தது.

ஆனால் பலருக்கு ஆன் லைன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பதற்றத்தில் உள்ளனர். பலர் பல்வேறு இடங்களில் உள்ள நெட் சென்டர்களுக்கும் அலைந்து திரிந்தனர். குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் இணைப்பு கிடைத்து லைன் மீண்டும் துண்டானது.
இதுகுறித்து பல்கலை கழகத்தில் புகார் செய்தும் சரியான பதில் இல்லை. இதன் காரணமாக பலர் கவலை அடைந்தனர். ஒரு சில இடங்களில் மட்டும் இணைப்பு கிடைத்தது. ஆயினும் பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், நான் ஜான்ஸ் கல்லூரியில் பிசிஏ படித்து வருகிறேன். எனக்கு கடந்த மூன்று நாட்களாவே ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை. இதே நிலை தான் என் நண்பருக்கும். இதனால் தேர்வுக்கு படிக்க முடியாமல் ஆன் லைன் சென்டருக்கு நடந்து வருகிறோம்.
இதனிடையே இது குறித்த புகார் குவிந்ததால் இரவு அதிரடியாக கூடுதலாக மூன்று இணைப்புகள் கொடுப்பட்டது. இருப்பினும் ஹால் டிக்கெட் கிடைக்காத மாணவர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் அவர்கள் பணம் கட்டிய படிவத்தை தேர்வு கூடத்தில் காட்டினால் போதும் என்றும் பல்கலை கழக வட்டாரம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications