செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகள் நவம்பரில் முடியும்.. மதுரை கோட்ட மேலாளர் அறிவிப்பு
செங்கோட்டை புனலூர் இடையிலான அகல ரயில் பாதைப் பணிகள் வரும் நவம்பரில் முடிவடையும் என மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியாரா தெரிவித்துள்ளார்.
செங்கோட்டை: மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டை புனலூர் அகல ரயில் பாதைப் பணிகள் வரும் நவம்பரில் முடிவடையும் என்று கோட்ட மேலாளர் நீனு இட்டியாரா தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியாரா நெல்லை, தென்காசி, செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள சுகாதாரம், பாதுகாப்பு, நடைமேடை, பிளாட்பார வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது: செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதையில் கட்டுமான பிரிவு பணிகள் நடந்து வருகின்றன. 85சதவிகித பணிகள் நிறைவு நிறைவு பெற்றுவிட்டன. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் நவம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும்.
அதன்பின் ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஆய்வு நடைபெறும். அவர்களின் அனுமதிக்குப்பின் ரயில் இயக்கம் தொடங்கும்.மேலும் மதுரைக் கோட்டத்தில் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரயில் நிலையங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் நிர்பயான் திட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மதுரை கோட்டத்திலுள்ள பெரிய ரயில் நிலையங்களில் நிர்பயா திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்டு ரயில் நிலையங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என நீனு இட்டியாரா கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications