செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை பணிகள் மார்ச் 2017 க்குள் முடிவடையும்: தலைமை பொறியாளர் தகவல்
நெல்லை: செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என தலைமை பொறியாளர் சுதாகரராவ் தெரிவித்தார்.
தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய வழித்தடமான செங்கோட்டை -கொல்லம் ரயில் பாதை இரு மாநில மக்களுக்கும் 105 ஆண்டு காலமாக வர்த்தக வழித்தடமாக இருந்தது. கேரள-தமிழக மக்களின் முக்கிய போக்குவரத்து தடமாக விளங்கும் இந்த ரெயில் பாதைக்கான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று இருமாநில மக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ரயில்வேத் துறைக்கு சவால் விடுக்கும் வகையில் இருந்த இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.357 கோடி தேவை என மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால் ஆண்டு தோறும் சுமார் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பணிகள் தொய்வடைந்தன. பழமையான ரயில்வே பாதை திட்டத்தின் அருமை கருதி இவ்வாண்டு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் வேகம் பெற்று தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஆரியங்காவு, எடமன், தென்மலை ஆகிய பகுதிகளில் உள்ள 5 குகைகளிலும் புதியதாக அமைக்கப்பட்ட குகைகளிலும் சிலிப்பர் கட்டைகள் வைக்கப்பட்டு தண்டவாளங்கள் பொருத்தும் பணி தீவீரமாக நடைப்பெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிடுவதற்க்காக தென்னக ரயில்வேயின் கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் சுதாகரராவ் நேற்று தென்காசி வந்தார் பின்னர் அவர் கேரள மாநிலம் எடமண், தென்மலை உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகள் வரும் 201 7மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் அதற்காக பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். செங்கோட்டை-புனலூர் அகல் ரயில் பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் ரயில் போக்கு வரத்து தொடங்கும் என்பதால் இரு மாநில எல்லைபகுதிகளில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications