சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க குமரி அனந்தன் முயற்சி- கைது செய்த போலீஸ்
தருமபுரி அருகே பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி : தருமபுரியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நதிகள் இணைப்பு, மது ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியறுத்தியம். பாரத மாதா திருக்கோவிலை கட்டிட வலியறுத்தியும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் பாத யாத்திரை மேற்கொண்டார். சென்னையில் தொடங்கி கடந்த 21 நாட்களாக நடைபெற்ற பாதயாத்திரை இன்று தருமபுரி வந்தடைந்தது.

பாப்பாரப்பட்டியில் குமரி அனந்தன் கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி அனந்தன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த வழக்கும் இன்றி அவரை விடுவிக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் குமரிஅனந்தனை விடுவிக்காவிட்டால் நாளை காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மூத்தத் தலைவர் குமரி அனந்தனின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications