For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூத்த பத்திரிகையாளர் விக்னேஷ் ராஜா மாரடைப்பால் மரணம்!

By Shankar
Google Oneindia Tamil News

மூத்த பத்திரிகையாளர், தராசு, திரைச்சுவை பத்திரிகைகளின் ஆசிரியர் விக்னேஷ் ராஜா இன்று பிற்பகல் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 55.

அரசியல், சினிமா துறையில் பத்திரிகையாளராக, பத்திரிகை ஆசிரியராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் விக்னேஷ் ராஜா. சொந்த ஊர் மதுரை.

Senior Journalist Vignesh Raja passed away

ஆரம்பத்தில் செய்தியாளராக இருந்த விக்னேஷ் ராஜா, பின்னர் தராசு, திரைச்சுவை ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியர் மற்றும் உரிமையாளராக இருந்தார்.

இரு முறை அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் வீட்டிலிருந்தபோது திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்து, அதே இடத்தில் இறந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இறப்பதற்கு 1 மணி நேரம் முன்பு வரை பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டுக் கொண்டு இயல்பாக இருந்தார் விக்னேஷ் ராஜா.

விக்னேஷ் ராஜாவுக்கு ஒரு மனைவி, இரு மகன்கள். மூத்த மகன் பொறியியல் படிப்பை முடித்து, திரைப்படங்கள் நடிக்க முயற்சித்து வருகிறார்.

அவரது வீடு தி நகரில் உள்ள ராமேஸ்வரம் சாலையில் ராம்ஸ் ப்ளாட்ஸில் உள்ளது. தொடர்புக்கு: 9500094343

English summary
Senior Journalist and Editor Thiraichuvai and Tharasu Vigneshraja was passed away today at his residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X