ஏ.கே. போஸ், செந்தில் பாலாஜி, ரெங்கசாமி எம்.எல்ஏக்களாக இன்று பதவியேற்பு
தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருந்து புதிதாக வெற்றி பெற்ற 3 பேர் இன்று எம்.எல்ஏக்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
சென்னை: அரவக்குறிச்சியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற ஏ.கே. போஸ், தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி பெற்ற ரெங்கசாமி ஆகியோர் இன்று சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால், அவரது அறையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனையடுத்து அமைச்சர்கள், அதிமுக உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக சட்டமன்றத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நவம்பர் 19ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 22ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மூன்று தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி, ஏ.கே. போஸ், ரெங்கசாமி ஆகியோர் 23ம் தேதி அப்பல்லோ சென்று சசிகலாவை சந்தித்தனர்.
வெற்றி பெற்ற மூன்று பேரும் எம்.எல்.ஏ.க்களாக சபாநாயகர் அறையில் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்றனர். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் இலாகாக்களை கவனிக்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த உடன் மூவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது 134 தொகுதிகளை வென்றது அதிமுக. சீனிவேல் பதவியேற்கும் முன்பாகவே மரணமடைந்தார். இன்று மூன்று எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதன் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications