தம்பிதுரைக்காக பெண்கள் காலில் விழுந்து வாக்கு கேட்கும் செந்தில்நாதன்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்காக வித்தியாசமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அக்கட்சியின் முன்னாள் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் செந்தில்நாதன்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் திமுக கோடீஸ்வர வேட்பாளர் கே.சி. பழனிசாமியுடன் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியவர் செந்தில்நாதன்.

இதனால் இவருக்கு மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் என்ற உயர்ந்த பதவியை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வழங்கினார். பின்பு அந்த பதவியில் இருந்து செந்தில்நாதன் நீக்கப்பட்டார்.

Senthilnathan's tactic to woe voters

இந்த நிலையில் கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் வாக்கு சேகரித்து வருகின்றார். ஆனால் அவருக்கு பல இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. இதன் காரணமாகவே அவர் பல இடங்களில் பிரச்சாரம் செய்யாமலே திரும்பி வருகின்றனர்.

இதையடுத்து அந்தந்த பகுதியில் செல்வாக்கு மிகுந்த நபர்களை தனித்தனியாக களம் இறக்கினார் தம்பிதுரை. இதன் காரணமாக ஏற்கனவே அரவக்குறிச்சி தொகுதியில் நன்கு அறிமுகம் ஆன செந்தில்நாதன் தம்பித்துரைக்காக காடு மேடுகளில் எல்லாம் வலம் வந்து பொது மக்களிடம் வாக்கு கேட்கின்றார்.

குறிப்பாக பெண்கள் காலில் விழுந்து வாக்கு கேப்படது பெண்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அரவக்குறிச்சி பகுதியில் பின் தங்கி இருந்த அதிமுக தற்போது புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றது.

இந்த அதிமுகவின் திடீர் வேகத்திற்கு எப்படி பிரேக் போடுவது என திமுக தரப்பு ரூம் போட்டு யோசனை நடத்தி வருகின்றது. காரணம், அங்கு திமுக தரப்பில் வலுவான நபர்கள் யாரும் இல்லை என்பது தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+