விழுப்புரம்: பெஞ்சில் உட்காருவதில் தகராறு: 7ம் வகுப்பு மாணவன் கொலை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் உணவு இடைவேளையின் போது, பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் 7 ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அம்மைககார அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தான். இன்று பள்ளி வந்த பாலமுருகனுக்கும் சக மாணவர் ஒருவருக்கும் உணவு இடைவேளையின் போது, பெஞ்சில் அமர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

seventh standard student hacked death near villupuram

இதில் மாணவர் ஒருவர் பாலமுருகனை கீழே தள்ளியுள்ளார். மர பெஞ்சின் மீது விழுந்த பாலமுருகன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். எனினும், செல்லும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டார்.

இதுகுறித்து சின்ன சேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை தள்ளிவிட்ட சக மாணவரை பிடித்து சிறுவர் நீதிமன்றத்தில் ஒப்படைந்தனர். அவர் பின்னர் கடலூரில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+