சென்னை மக்களுக்கு உதவும் பெண் தன்னார்வலர்களை சங்கடப்படுத்தும் சில ஆண்கள்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ முன்வந்த பெண் தன்னார்வலர்கள் சில விஷமிகளால் வேதனை அடைந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஏராளமான தன்னார்வலர்கள் உதவினார்கள், உதவி செய்து வருகிறார்கள். பல பெண்களும் தன்னார்வலர்களாக செயல்பட்டு வருகிறார்கள். அப்படி தன்னார்வலர்களாக செயல்படும் பெண்கள் தங்களின் செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உதவி தேவைப்படுவோர் தங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

அப்படி செல்போன் எண்களை அளித்த பெண்களில் ஒருவரான ப்ரியாவுக்கு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் ப்ரியாவை தொடர்பு கொண்டுள்ளார். உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று ப்ரியா கேட்டதற்கு, நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என இரட்டை அர்த்தத்தில் அவர் பேசியுள்ளார்.
ப்ரியா போன்று பல பெண் தன்னார்வலர்களும் செல்போன் எண்ணை வெளியிட்டு சங்கடத்தில் சிக்கியுள்ளனர். பூர்ணிமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சென்னை மக்களுக்காக நிவாரணப் பொருட்களை சேகரித்துள்ளார். அப்போது அழகு என்பவர் எதுவும் அளிக்காமல் பூர்ணிமாவுக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.
திவ்யா பாலச்சந்தர் என்ற சிவில் என்ஜினியர் கூறுகையில்,
முதலில் நாங்கள் எல்லாம் சகோதரர்கள் போன்று என்று கூறி ஆரம்பிக்கிறார்கள். பின்னர் சம்பந்தமே இல்லாத மெசேஜ்கள் அனுப்புகிறார்கள். தனக்கு பயமாக உள்ளதாக ஒருவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பியதுடன், போன் செய்தார். என்னவென்று கேட்டதற்கு கன்றுக்குட்டிக்கு உணவு அளிப்பதாக தெரிவித்தார். இரவு முழுவதும் எனக்கு மெசேஜ் அனுப்பினார்.
அறை முழுவதும் தண்ணீராக உள்ளதாக மறுநாள் அவர் தெரிவித்தார். எங்கு என்று கேட்டதற்கு தெரியாது என்றார். தன்னை சகோதரர் போன்று நினைக்குமாறு கூறி புகைப்படம் அனுப்ப முயன்றார் என்றார்.












Click it and Unblock the Notifications