வந்துட்டாருயா தினகரன்... தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?... ஜெயக்குமார் பதவிக்கும் ஆப்பு!
தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்று தெரிகிறது.
சென்னை: தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளதால் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம். அதேவேளையில் தினகரனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த அமைச்சர் ஜெயக்குமாரின் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிகிறது.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் தினகரன் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த 1-ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பல முறை ஜாமீன் பெற முயற்சித்தும், அவரது மனு மீதான விசாரணை தள்ளி போய் கொண்டே இருந்தது. இதனிடையே, அதாவது தினகரன் சிறைக்கு செல்வதற்கு முன்னரே இரட்டை இலையை பெற அதிமுகவில் பிளவுப்பட்டுள்ள இரு அணிகளும் ஒன்று சேர இரு அணிகளும் விரும்பின.

பேச்சுவார்த்தையில் சிக்கல்
இரு அணிகளும் இணைய வேண்டும் என்றால் தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் நிபந்தனை விதித்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி வீட்டில் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஒதுக்கி வைப்பதாக அறிவிப்பு
இந்நிலையில் தினகரனையும், சசிகலாவையும் கட்சியின் நலன் கருதியும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் ஒதுக்கி வைப்பதாக அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கூட்டாக அறிவித்தனர். மேலும் தினகரன் சிறை சென்றது குறித்து அமைச்சர் சிவி சண்முகத்திடம் கேட்டபோது, இது அவரது தனிப்பட்ட விவகாரம். அவர் மீதான வழக்கை அவர்தான் சந்திக்க வேண்டும். இதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றார்.

சசிகலாவின் பேனர்கள் அகற்றம்
இணைப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் கட்சி தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பேனர்களை நீக்க வேண்டும் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து சசிகலாவின் பேனர்கள் நீக்கப்பட்டன. இதனால் சுமூக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் இரு அணிகளின் தலைவர்களும் கூறிய மாறுபட்ட கருத்துகளால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

கூவத்தூர் உறுதிகள்
இதனிடையே கூவத்தூரில் உறுதியளித்தபடி, எம்எல்ஏ-க்கள் பணம், பதவி, பரிசுப் பொருள்கள் ஆகியன இன்னும் வழங்கப்படவில்லை என்பதால் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் ரகசிய கூட்டங்களை நடத்தி வந்தனர். ஏற்கெனவே சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி என்றிருந்த நிலையில் பத்து பத்து எம்எல்ஏ-க்கள் வீதம் தோப்பு வெங்காடசலம், தமிழ்செல்வன் உள்ளிட்டோரும் தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.

தினகரனுக்கு ஜாமீன்
இந்நிலையில் தினகரனுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று சென்னை வந்தடைந்தார். கூவத்தூரில் கூறியது போல் சில சமூகத்து எம்எல்ஏ-க்கள் உறுதியளித்தப்பட்ட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமியிடம் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கேட்டுகொண்டும் அது நடைபெறாத நேரத்தில் தற்போது தினகரன் என்ட்ரி ஆகியிருக்கிறார்.

மௌனத்தில் அமைச்சர்கள்
இத்தனை நாட்கள் தினகரனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த அமைச்சர்கள் தற்போது அமைதி காத்து வருகின்றனர். அவ்வளவோ பேச்சு பேசிய அமைச்சர் ஜெயகுமாரும் நேற்று டெல்லியில் தினகரன் அதிமுகவில் தொடர்பாது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அதுகுறித்து வழிகாட்டுதல் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்து விட்டு சென்றார். ஆனால் அந்த குழு யார் என்று அவர் சொல்லாமல் சென்றுவிட்டார்.

பயத்தையே காட்டுகிறது
இதுகுறித்து தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், எடப்பாடிக்கு அமைச்சர்கள் ஆதரவு இருந்தாலும், தினகரனுக்கு எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது. தற்போது தினகரன் வெளியே வந்துள்ள நிலையில் அதிருப்தி எம்எல்ஏ-க்களை சமாதானப்படுத்தும் நோக்கில் அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது அமைச்சர்கள் ஏதும் கருத்து தெரிவிக்காதது தினகரன் மீதான பயத்தையே காட்டுகிறது. அமைச்சர் ஜெயகுமாரின் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications