ஸ்டாலின், கமலை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்ததன் பின்னணி என்ன?
ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசனை சிங்கப்பூர் அமைச்சர் சென்னையில் சந்தித்து பேசினார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சிங்கப்பூர் அமைச்சர் ஸ்டாலின், கமலை ஏன் சந்தித்தார்?...வீடியோ
சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்து பேசினார்.
சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இந்தியாவிற்கான தூதர் லிம் துவான் குவான் ஆகியோர் சென்னைக்கு வந்தனர். அப்போது சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டின் தூதரகத்தின் தூதர் ராய் கோவுடன் சென்று மேற்கண்ட இருவரும் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இந்தியா- சிங்கப்பூர் உறவுகள், வர்த்தகம், அரசியல் உள்ளிட்ட விவகாரங்களை பேசியதாக கூறப்படுகிறது.

இதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். கமலுடனும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் அரசியல் குறித்து அலசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications