எமனாக மாறிய அரையாண்டு விடுமுறை.. ஏரியில் குளிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அரையாண்டு விடுமுறையின் போது ஏரியில் குளிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள மூக்கனூரை சேர்ந்தவர் விவசாயி அசோக்குமார். இவருக்கு அபிராமி (13), திவ்யா (9) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

அரையாண்டு விடுமுறை என்பதால் மூக்கனூர் ஏரியில் குளிக்க நேற்று சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications