இதுவல்லவோ நேர்மை! தவறவிட்ட ரூ.8.50 லட்சம் ஒப்படைப்பு.. சிவகாசி பெண்ணுக்கு குவியும் பாராட்டு
தவறவிட்ட பணத்தை உரிமையாளரிடம் ஒரு பெண் ஒப்படைத்துள்ளார்.
சிவகாசி: துணிக்கடை உரிமையாளர்கள் தவறவிட்ட எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை, கடை உரிமையாளரிடமே ஒரு பெண் கண்டெடுத்து ஒப்படைத்துள்ளார். இதனால் அந்த பெண்ணிற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சிவகாசி அருகே சாட்சியாபுரத்தை சேர்ந்தவர் சிவசங்கரி. இவர் டைலரிங் வேலை செய்து வருகிறார். டைலரிங் வேலைக்காக சிலதுணிகளை வாங்குவதற்கு சிவசங்கரி, தெற்கு ராஜவீதியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு போனார்.

உரிமையாளர் கொடுத்த பணப்பை
தனக்கு தேவையான துணியை வாங்கிவிட்டு அதற்கான பணத்தையும் கடை உரிமையாளரிடம் கொடுத்தார். அவரது பணத்தை பெற்றுகொண்ட கடை உரிமையாளர், வாங்கிவைத்த துணிப்பைக்கு பதிலாக கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்த பையை தவறுதலாக கொடுத்துவிட்டார். அந்த பையில் ரூபாய் எட்டரை லட்சம் ரூபாய் இருந்தது.

விசாரணை ஆரம்பம்
அந்த பையை வாங்கிக் கொண்டு வீடு திரும்பி சிவங்கிரி, பின்னர் பையை பிரித்து பார்த்தார். அதில் பணக்கட்டுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து மீண்டும் ஜவுளிக் கடைக்கு சென்றார். இவர் செல்வதற்குள், கடை உரிமையாளர்கள் பணப்பையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து, அதற்கான விசாரணையும் கடைக்குள் ஆரம்பமாகி இருந்தது.

திருப்பி கொடுத்தார்
கடைக்குள் நுழைந்த தன்னிடமிருந்த பணத்தை கடை உரிமையாளரிடமே திருப்பி கொடுத்தார். அவரது நேர்மையை கண்ட கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த போலீசார் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

உழைத்த பணமே சொந்தம்
இதுகுறித்து கூறிய சிவசங்கரி, "பையில் இருந்த பணம் பெரிய தொகை என்றாலும், உழைத்து சம்பாதிப்பது மட்டும்தான் நமக்கு சொந்தம் என்பதால், பணத்தை திருப்பி தந்துவிட்டேன்" என்றார். சிவசங்கரியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications