திருச்சி ஜெயஸ்ரீ முரளிதரன் உட்பட 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி டிரான்ஸ்பர்!!
சென்னை: திருச்சி மாவட்ட ஆட்சியரான ஜெயஸ்ரீ முரளிதரன் இடமாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஆர்.கிர்லோஷ் குமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். தற்போது திடீரென அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டு முக்கியத்துவம் இல்லாத கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இதேபோல தேனி மாவட்ட ஆட்சியராக இருக்கும் கே.எஸ்.பழனிச்சாமி திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் ஆட்சியர் என்.வெங்கடாசலம், தேனி மாவட்ட ஆட்சியராகவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிகரன் திண்டுக்கல் ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வி.ராஜாராம் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் டி.முனுசாமி சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருக்கும் ஆர்.கிர்லோஷ்குமார் நகரமைப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications