ஸ்கைப் இலவச சேவைகள்... வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ளலாம்
ஸ்டாக்ஹோம் : தமிழகத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தமிழக சொந்தங்களை தொடர்பு கொள்ள ஸ்கைப் இலவச சர்வதேச அழைப்புகளை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால், நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

செல்போன், தொலைபேசிகள் செயலிழந்து விட்டதால் உறவினர்களையோ, மீட்புபணியினரையோ தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் பலரும் கலக்கமடைந்துள்ளனர். எனவே தமிழகத்தில் உள்ள உறவினர்களை தொடர்புகொள்ளும் வகையில், ஸ்கைப் நிறுவனம், மொபைல் மற்றும் லேண்ட்லைன் அழைப்புகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்கைப் அறிவிப்பு
இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தற்பொழுது பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தொலைதொடர்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் - தமிழக கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசிகளுக்கு சர்வதேச அழைப்பு சேவையை வரும் சில தினங்களுக்கு கட்டணமற்ற* இலவச சேவையாக உடனடியாக அமுல்படுத்துகிறோம்.
கனமழையின் பாதிப்பு முற்றும் தெரியாததால், இந்த இக்கட்டான சூழ்நிலையில், அயல்நாட்டில் இருப்பவர்கள், தமிழகத்தில் இருக்கும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் தொடர்பில் இருக்க இந்த மாற்று தொலைதொடர்பு உதவியினை வழங்குகிறோம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications