Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்கைப் இலவச சேவைகள்... வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ளலாம்

Subscribe to Oneindia Tamil

ஸ்டாக்ஹோம் : தமிழகத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தமிழக சொந்தங்களை தொடர்பு கொள்ள ஸ்கைப் இலவச சர்வதேச அழைப்புகளை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால், நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Skype International calls to landlines and mobiles to TamilNadu

செல்போன், தொலைபேசிகள் செயலிழந்து விட்டதால் உறவினர்களையோ, மீட்புபணியினரையோ தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் பலரும் கலக்கமடைந்துள்ளனர். எனவே தமிழகத்தில் உள்ள உறவினர்களை தொடர்புகொள்ளும் வகையில், ஸ்கைப் நிறுவனம், மொபைல் மற்றும் லேண்ட்லைன் அழைப்புகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஸ்கைப் அறிவிப்பு

இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தற்பொழுது பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தொலைதொடர்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் - தமிழக கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசிகளுக்கு சர்வதேச அழைப்பு சேவையை வரும் சில தினங்களுக்கு கட்டணமற்ற* இலவச சேவையாக உடனடியாக அமுல்படுத்துகிறோம்.

கனமழையின் பாதிப்பு முற்றும் தெரியாததால், இந்த இக்கட்டான சூழ்நிலையில், அயல்நாட்டில் இருப்பவர்கள், தமிழகத்தில் இருக்கும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் தொடர்பில் இருக்க இந்த மாற்று தொலைதொடர்பு உதவியினை வழங்குகிறோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+