கச்சத்தீவு அருகே மீன் பிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றுள்ளது.
அவர்கள் அனைவரும் அவர்களின் 3 படகுகளோடு, தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டுள்ளனராம்.
ஜூன் 24ம் தேதிதான் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்களைப் பிடித்துச் சென்றது இலங்கைக் கடற்படை. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது 17 பேரை பிடித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை பிடித்துச் செல்வதும், தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் தொடர்கதையாக வருவது மீனவர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications