நாடாளுமன்ற தேர்தலில் 'அம்மா' எண்ணப்படி ச.ம.க. செயல்படும்: சரத்குமார் பேட்டி
Subscribe to Oneindia Tamil

இது குறிதக்து அவர் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஏற்காடு இடைத்தேர்தலில் பணியாற்ற குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயரவும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையவும் மத்திய அரசு தான் காரணம். தங்கத்தை வாங்காதீர்கள் என்கிறார்கள். ஆனால் அதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
கேரளாவில் சமக உதயமாகிறது. இதையடுத்து கேரளாவில் நடக்கும் அடுத்த தேர்தலில் சமக போட்டியிடும். அமெரிக்க கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்திருப்பது நம் நாட்டு பாதுகாப்பின் பலவீனமாகும்.
கூட்டணி தர்மத்தை நாங்கள் முறையாக கடைபிடித்து வருகிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணப்படி சமக செயல்படும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுகளையும் அதிமுக கைப்பற்றும் என்றார்.












Click it and Unblock the Notifications