உங்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா.. பிரியா வாரியர் வழக்கில் விளாசிய சுப்ரீம்கோர்ட்
இஸ்லாமிய மதத்திற்கு எதிராக நடித்ததாக ப்ரியா வாரியர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: இஸ்லாமிய மதத்திற்கு எதிராக நடித்ததாக ப்ரியா வாரியர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் உலகம் முழுக்க வைரலானது. ப்ரியா வாரியர் நடித்து இருக்கும் இந்த பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது.
கேரளாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ப்ரியாவின் கண்ணசைவை வைத்து பல வீடியோவும், மீம்களும் வெளியானது. இதை வைத்து பலரும் மீம் கூட போட்டு இருந்தார்கள்.

வழக்கு தொடுத்தார்
இந்த பாடல் இஸ்லாமியர்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்றும், முகமது நபியின் மனைவியை பற்றி தவறாக பேசுகிறது என்று ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ப்ரியா வாரியரும் , படத்தின் இயக்குனர் ஒமார் லுலுவும் நீதிமன்ற படியேறினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

விளக்கம் அளித்தனர்
இதில், இந்த பாடலில் தவறான வரிகள் எதுவும் இல்லை. இது கேரளாவின் வடக்கு பகுதியில் இஸ்லாமியர்களை பாடக்கூடிய பாடல்தான். முகமது நபிக்கும் அவரது முதல் மனைவி கதீஜாவிற்கும் இடையேயானகாதலை பற்றியும், அன்பை பற்றியுமான பாடல் இது என்று விளக்கம் அளித்தனர்.

தள்ளுபடி செய்யப்பட்டது
இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து ப்ரியா வாரியர், படத்தின் இயக்குனர், படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த பாடலில் தவறு ஏதும் இல்லை என்றுள்ளனர்.

கண்டித்தனர்
மேலும். யாரோ எதோ பாடல் எழுதுகிறார்கள். அதில் யாரோ நடிக்கிறார்கள். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. ஏன் இப்படி எல்லாவற்றுக்கும் போலீசில் புகார் அளிக்கிறீர்கள் என்று கண்டிப்பு காட்டியுள்ளனர். உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா என்று கண்டிப்பாக கேட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications