மவுலிவாக்கம்... "விட்டா கிறுக்கனாக்கிருவாங்க போல"... சோஷியல் மீடியாவில் கொதித்த நெட்டிசன்கள்!!
மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டட இடிப்பு தொடர்பாக ஏற்பட்ட மிகப் பெரிய குழப்பத்தை வைத்து சமூக வலைதளங்களில் மக்கள் தங்களது எரிச்சலை வெளிப்படுத்தினர்.
சென்னை: மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடத்தை இடிப்பது தொடர்பாக ஏற்பட்ட கடும் தாமதத்தால் மக்கள் செம டென்ஷனாகி விட்டார்கள் இன்று. இதை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் தங்களது கடுப்பையும், எரிச்சலையும் கொட்டித் தீர்த்து விட்டனர்.
மவுலிவாக்கத்தில் அபாயகரமான நிலையில் இருந்த 11 மாடிக் கட்டடம் இடிப்பு இன்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. முதலில் பிற்பகல் 2 மணிக்கு இடிக்கப்படும் என்றார்கள். பின்னர் 3 மணி என்றார்கள். அதன் பிறகு 5 மணி என்று தகவல் வந்தது. கடைசியில் ஒரு வழியாக சூரியன் மறைந்த நிலையில் கட்டடம் தகர்க்கப்பட்டது.
இது இடிப்பைக் காண காத்திருந்த மக்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கி விட்டது. இதுகுறித்து டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் கிண்டலாக பதவிட்டு தங்களது எரிச்சலை மக்கள் வெளிப்படுத்தினர்.
|
விட்டா கிறுக்கனாக்கிருவாங்க போல
இது லோகேஷன் என்பவரின் டென்ஷன்.. மனுஷன் ரொம்பத்தான் டென்ஷனாகிட்டார் பாவம்!
|
அதானே!
இது அதற்கும் மேல். சாம்சங் காரன் படிச்சா பாவம் செத்துருவான்!
|
இது அல்டிமேட் பாஸ்!
இது அல்டிமேட் கிண்டல் பாஸ்.
|
காலைல ஆரம்பிச்சது
எவ்வளவு கடுப்பா இருக்கு பாஸ்.. சும்மாவே பார்த்துட்டிருக்கிறது!
|
இதெல்லாம் ரெம்ப நக்கலு ஆமா!
நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்!
|
எப்பப்பா இடிப்பீங்க!
இடிக்கும் வரை இடத்தை விட்டு நகர முடியாது ஒரு பத்திரிகையாளரின் சோகப் பதிவு!