குன்னூர் அருகே மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பரிதாப பலி

குன்னூர் அருகே கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தடுப்புச்சுவர் அமைக்க குழி தோண்டிய போது விபத்து நேரிட்டது.

Subscribe to Oneindia Tamil

குன்னூர்: அருகே தடுப்புச்சுவர் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்த விழுந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குன்னூரை அடுத்த மேல்கரன்சி என்னுமிடத்தில் கூலித் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தடுப்புச்சுவர் அமைப்பதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Soil collapsed in Coonoor: 4 workers died!

4 தொழிலாளர்கள் குழிக்குள் நின்றுக்கொண்டு மண்ணை வெளியேற்றும பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏதிர்பாராதவிமாக திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

இதில் 4 கூலித் தொழிலாளர்களும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மண்ணில் புதைந்திருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோசதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின் போது தொழிலாளர்கள் 4 பேர் மண்ணில் புதைந்த பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+