தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் தகவல்
தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்குவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்குவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கன்னியாகுமரியை நெருங்கிய ஓகி புயலால் தென் மாவட்டங்கள் நல்ல மழையை பெற்றன. இதனால் தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் மற்றும் நீர் ஆதாரங்கள் நிரம்பின.

ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பலத்த சேதம் அடைந்தது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.
ஓகி புயலின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் இன்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications