சென்னை சோழிங்கநல்லூரில் மோடி பேனர்கள் கிழிப்பு
சென்னை சோழிங்கநல்லூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பேனர்கள் கிழிக்கப்பட்டன.
சென்னை சோழிங்கநல்லூரில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி ராணுவ தளவாட பொருட்களின் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது தமிழகமே கொதிப்பில் உள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் வரும் ஏப்ரல் 12-இல் தமிழகத்துக்கு வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டவுள்ளது.
இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் மோடியை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் பேனர்களை கிழித்துவிட்டனர்.
இதையடுத்து மோடியை வரவேற்க வைக்கப்பட்ட பேனரில் காவிரி எங்கே? என கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளது. இந்த பேனர்களை அகற்றிய அதிகாரிகள் புதிய பேனர்களை வைத்து விட்டனர்.