2011க்குப் பிறகு முதல் முறையாக ஒரே மேடையில் பேசப் போகும் கருணாநிதி, சோனியா!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மே 5ம் தேதி தீவுத் திடலில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்து கொண்டு பேசவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சிறப்புப் பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்துள்ளனர்.
சோனியா காந்தி மே 5ம் தேதி சென்னை வருகிறார். அன்று மாலை தீவுத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். திமுக -காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துப் பேசுகிறார். திமுக தலைவர் கருணாநிதியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

இதையொட்டி டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னைக்கு நேற்று வந்தனர் இவர்கள் சோனியாகாந்தி பேசவிருக்கும் தீவுத்திடல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பொதுக்கூட்ட மேடை, கார் நிறுத்தும் இடங்கள், பாதுகாப்பு வசதிகள், பார்வையாளர்கள் அமரும் பகுதி, வேட்பாளர்கள் அமரும் பகுதி, வரவேற்பு அளிப்பவர்களின் பெயர் பட்டியல் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது காங்கிரஸ் கட்சி மாநில பொதுசெயலாளர் ஜோதி, பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் கோபண்ணா, துணைத்தலைவர் ஏ.பி.சி.சண்முகம், திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் பல்துறை அதிகாரிகளுடனும் பாதுகாப்புப் படையினர் ஆலோசனை நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
2011க்குப் பிறகு
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அப்போது கருணாநிதி, சோனியா கூட்டாக பேசி வாக்கு சேகரித்தனர். அதன் பின்னர் நடந்த லோக்சபா தேர்தலில் இந்தக் கூட்டணி உடைந்தது. எனவே 2011ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் முதல் முறையாக கருணாநிதியும், சோனியாவும் ஒரே மேடையில் பேசவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications