For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குலசேகரப்பட்டிணம் கடற்கரையில் நள்ளிரவில் நடந்த சூரசம்ஹாரம்

Google Oneindia Tamil News

உடன்குடி: குலசேகரப்பட்டிணம் தசரா விழாவையொட்டி கடற்கரையில் நள்ளிரவு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இது போல் தமிழகத்திலும் நெல்லை மாவட்டம் உடன்குடி அருகே உளள குல்சேகரப்பட்டிணம் முத்தாரம்மன் தசரா விழா பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான சூரஹம்காரம் நள்ளிரவு நடந்தது. இதையொட்டி காலை 6 முதல் நள்ளிரவு 11 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தன.

நள்ளிரவு 11 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் சிதம்பரஸேவரர் கோயில் முன்பாக எழுந்தருளினார். 11.40 மணிக்கு முதலில் சூரனின் தலையை வாதம் செய்தார். 11.48க்கு சிங்க தலையையும், 11.55க்கு எருமை தலையையும் 12 மணிக்கு சேவல் தலையையும் வதம் செய்தார்.

அப்போது கடற்கரையில் குழுமியிருந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விண்ணை முட்ட பக்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து காலை 6 மணிக்கு அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது.

தசரா திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் பூண்டு வந்திருந்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால் குலசேகரப்பட்டிண்ம் திணறி போனது.

சூரஹம்காரம் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கயிறு கட்டாதததால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Soorasamharam was held in Kulasekrapattinam beach as part of Dasara festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X