அதிமுக புறக்கணிப்பு: ஜி.கே.வாசன், வேல்முருகனுக்காக வருத்தப்படும்... வைகோ !
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வால்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோருக்கு அதிமுக கூட்டணியில் இடம் அளிக்கப்படாததற்கு வருந்துவதாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார். மேலும் கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த பண்ருட்டி தி. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட சில சிறிய கட்சிகளுக்கு ஒரு இடம்கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அதேபோல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கணிசமான தொகுதிகளை பெற்று தேர்தலை சந்திக்கலாம் என தமாகா கணக்கு போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கட்சிக்கும் எந்த தொகுதியும் அதிமுக வெளியிட்ட அறிவிப்பில் இல்லை. இதனால் தமாகாவின் நிலைமையும் பரிதாபமாகியுள்ளது.
இந்நிலையில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், த.மா.கா. மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை கூட்டணியில் இணைப்பது குறித்து தன்னால் தனித்து எந்த கருத்தும் கூற முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக கூட்டணியில் வாசன், வேல்முருகன் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படாததற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய சூழலில் அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்று தெரியாது. மற்றப்படி நானாக எதையும் சொல்ல முடியாது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், நானாக எந்த கருத்தையும் தற்போது கூற முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications