சென்னை-கூடுர் இடையே பராமரிப்பு பணிகள்; ரயில்களின் நேர மாற்றத்தை அறிவித்தது தெற்கு ரயில்வே!
சென்னை: சென்னை மற்றும் கூடுர் இடையேயான தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் தொடங்க இருப்பதால் அவ்வழியாக செல்லும் ரயில்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த நேர மாற்றங்களினால் பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும், பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் பழைய நேரத்திலேயே ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே மேலும் கூறியுள்ளது.

அதன்படி, "சூலூர் பேட்டையில் இருந்து இன்று மற்றும் வருகிற 14, 16, 17, 21, 23, 24, 28, 30 மற்றும் அக்டோபர் 1, 5 ஆகிய தேதிகளில் பகல் 12 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வ.எண்:66026), அரை மணி நேரம் தாமதமாக 12.30 மணிக்கு இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் வருகிற 14, 16, 17, 21, 23, 24, 28, 30 மற்றும் அக்டோபர் 1, 5 ஆகிய தேதிகளில் பகல் 2.05 மணிக்கு விஜயவாடாவுக்கு இயக்கப்படும் "பினாகினி" எக்ஸ்பிரஸ் ரயில் (12712), 40 நிமிடம் தாமதமாக 2.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications