சென்னை குளிருது... தென் மாவட்டங்களில் மழை பெய்யுமாம்
சென்னை: சென்னையில் மழையைக் காணோம். மாறாக இரவு நேரங்களில் குளிர் சூழ்நிலை நிலவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தென் மாவட்டங்ளில் மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது வானிலை மையம்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள போதிலும் இதுவரை தமிழகத்தின் பல பகுதிகளில் பெரிய அளவில் மழை இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள் மற்றும் சில பகுதிகளில்தான் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

சென்னையில் மழை இல்லை. பகல் நேரங்களில் இதமான தட்பவெப்ப நிலை காணப்படுகிறது. இரவு, அதிகாலை நேரங்களில் குளிர்ச்சியான சீதோஷ்ணம் காணப்படுகிறது.
இந்த நிலையல், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அது கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications