அரபிக்கடலில் ஈரக் காற்று... தென்மேற்கு பருவமழை ஜூன் 9 முதல் தொடங்கும்- வானிலை மையம்
சென்னை: தென்மேற்குப் பருவமழை நாளை மறுநாள் கேரளாவில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரபிக் கடல் பகுதியில் ஈரப்பதக் காற்று அதிகரிப்பதால் பருவ மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக கூறிய பாலச்சந்திரன், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும் என்று கூறினார்.
கேரளா மாநிலத்தில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் வரை மழை நீடிக்கும். கேரளாவில் தொடர்ச்சியாக பெய்யும் மழையால் தமிழகத்தின் தென்மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும். குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமும் உயரும். குற்றாலத்தில் உள்ள அருவிகளிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இன்னும் 48 மணி நேரத்தில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வட தமிழகத்திலும், தென் தமிகத்திலும் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செம்ரம்பாக்கத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். சென்னையை பொறுத்த வரை மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றார்.
தெற்கு அரபிக்கடலில் ஈரப்பதத்துடன் கூடிய காற்று வலுவடையக்கூடிய நிலையில் உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் குமரி மாவட்டத்திலும் மழை பெய்ய தொடங்கும். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதன் அறிகுறியாக குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
Girls enjoying the first #Monsoon rain in #Kochi #SouthWestMonsoon #Monsoon2016 https://t.co/MClYZugh2F pic.twitter.com/8Rkh6FaXs2
— Oneindia Tamil (@thatsTamil) June 7, 2016
குலசேகரம், திருவட்டார், பொன்மனை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தபடி இருந்தது. இதனால் இனிவரும் நாட்களில் அணைகளுக்கு கணிசமான நீர் வரத்து இருக்கும் என்று விவசாயிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications