For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் ஜெ. குணமடைய 'பெளர்ணமி' பூஜை

முதல்வர் ஜெயலலிதாவுக்காக அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் அதிமுகவினர் சிறப்பு பூஜை நடத்தினர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் முழுமையாக குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் பெளர்ணமியையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்திருந்தார்.

Special full moon day prayers offered by ADMK Cadres

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இதனிடையே இன்று பெளர்ணமியை முன்னிட்டு ஜெயலலிதா குணமடைய வேண்டி அதிமுகவினர் அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

இப்பூஜையில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்று ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்தனர்.

English summary
Special full moon day prayers being offered by TN CM Jayalalithaa's supporters outside Apollo Hospital in Chennai for her speedy recovery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X