அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் ஜெ. குணமடைய 'பெளர்ணமி' பூஜை
முதல்வர் ஜெயலலிதாவுக்காக அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் அதிமுகவினர் சிறப்பு பூஜை நடத்தினர்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் முழுமையாக குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் பெளர்ணமியையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இதனிடையே இன்று பெளர்ணமியை முன்னிட்டு ஜெயலலிதா குணமடைய வேண்டி அதிமுகவினர் அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
Special full moon day prayers being offered by TN CM Jayalalithaa's supporters outside Apollo Hospital in Chennai for her speedy recovery pic.twitter.com/8vU4sRTB45
— ANI (@ANI_news) November 14, 2016
இப்பூஜையில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்று ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை செய்தனர்.