ஜெயலலிதா விடுதலையாக வேண்டி கோவில், தேவாலயம், மசூதிகளில் சிறப்பு வழிபாடு
கோவை: ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி வால்பாறை கோவில், மசூதி, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டதால் வரும் 6ம் தேதி வரை அவர் சிறையில் தான் இருக்க வேண்டும்.

இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் ஜெயலலிதாவின் விடுதலைக்காக சிறப்பு பிரார்த்தனை நடந்துள்ளது. வால்பாறையில் உள்ள கோவில்களில் வியாழக்கிழமை ஜெயலலிதாவுக்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜைகள் வால்பாறை தொகுதி செயலாளர் வி. ஹமீது தலைமையில் நடைபெற்றது.
மேலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றன. இது தவிர வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
ஜெயலலிதா விடுதலையாகி வெளியே வர கட்சியினர் தவிர்த்து பொது மக்களும் பிரார்த்தனை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications